முகப்பு
இந்தியா

நாட்டில் புதிதாக 40,715 பேருக்கு தொற்று; ஒரேநாளில் 199 பேர் பலி

நாட்டில் புதிதாக 40,715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 199 பேர் பலியாகியுள்ளனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

நாட்டில் புதிதாக 40,715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 199 பேர் பலியாகியுள்ளனர். 

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 40,715 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 1,16,86,796 ஆக அதிகரித்துள்ளது. 

Advertisement

கடந்த 24 மணி நேரத்தில் 29,785 பேர் உள்பட தற்போது வரை 1,11,81,253 பேர் குணமடைந்துள்ளனர்

தற்போது 3,45,377 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். 

கரோனாவுக்கு மேலும் 199 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 1,60,166 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 23,54,13,233 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 9,67,459 மாதிரிகள் நேற்று மட்டும் பரிசோதனை செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments