இலங்கையில் மார்ச் 29 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: கல்வி அமைச்சகம் 
இந்தியா

இலங்கையில் மார்ச் 29 முதல் பள்ளிகள் திறக்கப்படும்: கல்வி அமைச்சகம்

தலைநகர் கொழும்பு உள்பட நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 29-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

IANS

தலைநகர் கொழும்பு உள்பட நாட்டின் மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 29-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்க இலங்கை கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. 

கரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை காரணமாக கடந்த அக்டோபரில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டது. இதையடுத்து சுகாதார அமைச்சகத்தின் பரிந்துரைகளைத் தொடர்ந்து அனைத்து பள்ளிகளும் மார்ச் 29-ம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல்பெரீஸ் ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

மேற்கு மாகாணங்களில் தொற்று நோய் அதிகரித்ததைத் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டது. தொற்று பாதிப்பு குறைந்துள்ளது நிலையில் பள்ளிகள் திறப்பதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 

அதன்படி மேற்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் மார்ச் 29 முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து அனைத்து சுகாதார நெறிமுறைகளும் கட்டாயம் பின்பற்றப்படும் என்று அவர் கூறினார். 

இலங்களை மொத்த பாதிப்பு 90,765 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 552 ஆகவும் உள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவிடம் 41 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

மாசித் திருவிழா: தங்க சூரிய பிரபை வாகனத்தில் காமாட்சி அம்மன்!

கடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

SCROLL FOR NEXT