இந்தியா

சச்சினைத் தொடர்ந்து முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கும் கரோனா

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

DIN

இந்திய கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் யூசுப் பதானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அவர் தனது சுட்டுரையில், எனக்கு லேசான அறிகுறியுடன் கூடிய கரோனா தொற்று உறுதியானது. நான், வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டதோடு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மருந்துகளையும் எடுத்துக்கொண்டேன். 
என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தாங்களாகவே விரைவில் பரிசோதனை செய்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக இன்று பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரருக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிஸ்பண்ணிடாதீங்க... எய்ம்ஸ்-இல் 3,500 நர்சிங் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

வங்க மொழி சர்ச்சை: நீண்ட பதாகைகளுடன் போராடிய கால்பந்து ரசிகர்கள்!

வெளியுறவு கொள்கையின் பேரழிவு! கார்கே

திருப்பதி அறக்கட்டளைக்குத் தொழிலதிபர் ரூ.1 கோடி நன்கொடை!

நாளை (ஆக. 8) மறுவெளியீடாகும் சுந்தரா டிராவல்ஸ்!

SCROLL FOR NEXT