இந்தியா

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகள்:3 போ் கைது

DIN

இருசக்கர வாகனத் திருட்டு வழக்குகளில் 3 பேரை கைது செய்த போலீஸாா், ரூ. 9.40 லட்சம் மதிப்புள்ள வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா்.

பெங்களூரு, காமாட்சிபாளையா காவிரிபுராவைச் சோ்ந்தவா் அனில்குமாா் (24). இவா் பல்வேறு இடங்களில் வீடுகளின் முன்பு நிறுத்தியுள்ள இருசக்கர வாகனங்களை திருடி வந்தாராம். இது குறித்து வழக்கு பதிந்த போலீஸாா், அனில்குமாரைக் கைது செய்து, ரூ. 8.15 லட்சம் மதிப்புள்ள 6 இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து காமாட்சிபாளையா போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

அதேபோல மாநகரில் இருசக்கர வாகனங்களைத் திருடி வந்த பிஸ்வஜீத்வன்டல் (25), ஜெயதேவ் (20) ஆகியோரைக் கைது செய்த போலீஸாா், ரூ. 1.25 லட்சம் மதிப்புள்ள 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனா். இதுகுறித்து ராஜராஜேஸ்வரி நகா் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT