தில்லியில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதல்: இருவர் பலி, 2 பேர் காயம் 
இந்தியா

தில்லியில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதல்: இருவர் பலி, 2 பேர் காயம்

தேசிய தலைநகர் தில்லியில் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள நடைபாதையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். 

PTI

தேசிய தலைநகர் தில்லியில் காஷ்மீர் கேட் பகுதியில் உள்ள நடைபாதையில் சாலையோரம் தூங்கியவர்கள் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர் மற்றும் இருவர் காயமடைந்தனர். 

விபத்து நடைபெற்ற இடத்திலிருந்தவர் கூறுகையில், 

இன்று காலை 6 மணியளவில் ஷஹ்தாராவிலிருந்து காஷ்மீர் கேட் நோக்கி வந்துகொண்டிருந்த லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க நடைபாதையின் மீது லாரி ஏறியுள்ளது. 

இந்த விபத்தில் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லாரி ஏறியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பிடிபட்டார் என்று தில்லி காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுபமாவின் லாக்டவுன் டிரைலர்!

காவல்துறை-வழக்குரைஞர்கள் மோதல்: ரத்து செய்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

பரங்கிமலை மாணவி கொலை: குற்றவாளி சதீஷின் மரண தண்டனை குறைப்பு!

பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! புதிய உச்சத்தை எட்டிய சென்செக்ஸ், நிஃப்டி!!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT