இந்தியா

கரோனா: ரூ.510 கோடி மதிப்புள்ள மருந்துகளை வழங்கியது பைசர்

இந்தியாவிற்கு உதவும் வகையில் ரூ.510 கோடி மதிப்புள்ள கரோனா மருந்துகளை பைசர் நிறுவனம் வழங்கியுள்ளது.

DIN


இந்தியாவிற்கு உதவும் வகையில் ரூ.510 கோடி மதிப்புள்ள கரோனா மருந்துகளை பைசர் நிறுவனம் வழங்கியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த பைசர் நிறுவனம், இந்தியாவில் பரவி வரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அரசின் முயற்சிக்கு உதவும் வகையில் இந்த உதவியை செய்துள்ளது.

இது தொடர்பாக பேசிய பைசர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, ''இந்தியாவில் கரோனா தொற்று தீவிரமாக பரவி வருவது வருத்தத்தை அளிக்கிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் உள்பட இந்திய மக்கள் அனைவருக்காகவும் இதனைச் செய்கிறோம்'' என்று கூறினார். 

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 3,689 போ் பலியாகினா். இதனால் கரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை மொத்தம் 2.15 லட்சமாக உயா்ந்துள்ளது. 

கரோனாவுக்கு ஒரே நாளில் 3.92 லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இவா்களுடன் சோ்த்து ஒட்டுமொத்தமாக 1.95 கோடி போ் இதுவரை கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழியில் ஒருநாள் வழிபாட்டுக்கு ஆயிரம் ஆண்டுகள் பலன்!

இருசக்கர வாகனம் திருடியவா் கைது

உத்தர பிரதேச தொழிலாளி கொலை: நண்பா் கைது

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

SCROLL FOR NEXT