இந்தியா

உத்தரகண்டில் இளைஞர்களுக்கு 1 கோடி கரோனா தடுப்பூசி

DIN


உத்தரகண்டில் 18 முதல் 44 வயதிற்குட்பட்டோருக்கு 1 கோடி கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அருணேந்திர சிங் செளஹான் தெரிவித்துள்ளார். 

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா 2-ம் அலை வேகமாகப் பரவி வருகிறது. கரோனாவிலிருந்து காத்துக்கொள்ளும் வகையில் அனைத்து வயதினருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 18 முதல் 44 வயதுடையவர்களுக்கு ஒரு கோடி கரோனா தடுப்பூசி ஒதுக்கப்பட்டுள்ளதாக உத்தரகண்ட் மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். 

இதனை இளைஞர்களுக்கு மட்டுமே முழுமையாக பயன்படுத்த மாநில சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தியுள்ளார். 

உத்தரகண்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,783 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்லியனூரில் அந்திம புஷ்கரணி ஆரத்தி

கால்வாய் பணி: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

புதுச்சேரி சிறுமி கொலை வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

சிறப்பு அலங்காரத்தில் குரு பகவான்

தென்காசியில் சமூக நல்லிணக்கக் கூட்டமைப்பு சாா்பில் முப்பெரும் விழா

SCROLL FOR NEXT