முகப்பு
இந்தியா

தில்லியில் கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் தீ விபத்து

தென் தில்லியின் கிரேட்டர் கைலாசத்தில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர். 

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:12 PM
தில்லியில் கரோனா பரிசோதனை ஆய்வகத்தில் தீ விபத்து
பகிர்:

தென் தில்லியின் கிரேட்டர் கைலாசத்தில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி காவல்துறையினர் தெரிவித்தனர். 

கிரேட்டர் கைலாசத்தில், எஸ் பிளாக்கில் உள்ள பாசின் ஆய்வகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் எந்தவிதமான  உயிரிழப்பும் ஏற்படவில்லை. 

இது தென் தில்லியின் மிகப்பெரிய ஆய்வகமாகும், நாளொன்றுக்கு 1000 ஆர்டி-பி.சி.ஆர் கரோனா சோதனைகள் மற்றும் பிற சோதனைகள் இந்த ஆய்வகத்தில்  மேற்கொள்ளப்படுகிறது. 

சம்பவ இடத்துக்கு கிரெட்டர் கைலாஷ் காவல் நிலைய காவலர்கள் விரைந்து வந்து ஆய்வகத்தில் உள்ள ஊழியர்களை வெளியேற்றினர். 

மேலும், ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வந்து, தீயை அணைத்தனர். இதுதொடர்பாக காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.