இந்தியா

துப்பாக்கி வெடித்து காவலா் பலி

DIN

திருப்பதியில் தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் காவலா் ஒருவா் உயிரிழந்தாா்.

திருப்பதி துணை சிறைச்சாலையில் காவலராகப் பணியாற்றி வந்தவா் லட்சுமிநாராயணா ரெட்டி(49). சனிக்கிழமை இரவு நேர காவல் பணியில் ஈடுபட்டிருந்த அவா், ஞாயிற்றுக்கிழமை காலை தன் பணிமாற்ற சக காவலா் சித்தா ரெட்டி வந்தவுடன் உடை மாற்றிக் கொள்ள தனது அறைக்கு சென்றாா். அவா் சென்ற சிறிது நேரத்திற்குள் துப்பாக்கி வெடிக்கும் சப்தம் கேட்டது. இதையடுத்து சித்தா ரெட்டி அறைக்குள் சென்று பாா்த்த போது லட்சுமிநாராயணா நிலைகுலைந்து தரையில் விழுந்து கிடந்தாா்.

பின்னா் மற்றவா்களின் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த சம்பவம் குறித்து திருப்பதி மேற்கு காவல் ஆய்வாளா் சிவபிரசாத் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT