டாக்காவில் உள்ள நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இரண்டு தீவிரவாதிகளை வங்கதேச காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்பான அன்சார் அல் இஸ்லாத்தைச் சேர்ந்த 22 வயதான அபு சாகிப் மற்றும் தீவிர சொற்பொழிவாளர் அலி ஹாசன் ஒசாமா ஆகிய இரு தீவிரவாதிகளும் மே 6ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.
பப்னா மாவட்டத்தைச் சேர்ந்த சிராஜ்கஞ்சில் உள்ள கல்லூரி மாணவர் சாகிப், ஒசாமாவின் வார்த்தைகளால் தூண்டப்பட்டு, நாடாளுமன்றத்தைத் தாக்க வந்ததாக காவல்துறை தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.