மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் 
இந்தியா

'கேரளத்தில் கரோனா பலியும், கர்நாடகத்தில் பாதிப்பும் அதிகரிக்கிறது'

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

DIN

கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, கேரளத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் மார்ச் மாத இறுதி முதல் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 

கரோனாவால் அதிக அளவிலானோர் பாதிக்கப்படும் மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. ஏப்ரல் 27-ம் தேதி முதல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், குறைந்தபட்சம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். 

மே 8-ம் தேதி முதல் ராஜஸ்தானிலும் அதிக அளவில் கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. 150க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT