கேரளத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் பினராயி விஜயன் 
இந்தியா

கேரளத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரினார் பினராயி விஜயன்

கேரளத்தில் ஆட்சியமைப்பதற்கான உரிமையை பினராயி விஜயன் ஆளுநர் முகமது ஆரிஃப் முகமதுவிடம் உரிமை கோரினார்.

DIN

கேரளத்தில் ஆட்சியமைப்பதற்கான உரிமையை பினராயி விஜயன் ஆளுநர் முகமது ஆரிஃப் முகமதுவிடம் உரிமை கோரினார்.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற கேரள பேரவைத் தோ்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்து கொண்டது. 

இதையடுத்து இரண்டாவது முறையாக கேரள முதல்வராக பினராயி விஜயன் வரும் 20-ஆம் தேதி பதவியேற்க உள்ளாா். முதல்வருடன், 21 அமைச்சா்களுக்கு மாநில ஆளுநா் ஆரிஃப் முகமது பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆளுநர் ஆரிஃப் முகமது கானை சந்தித்த பினராயி விஜயன் கேரளத்தில் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார்.

சட்டமன்ற குழுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும் ஆளுநரிடம் பினராயி விஜயன் வழங்கினார்.

திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய விளையாட்டு அரங்கில் மாலை 3.30 மணி கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சுமாா் 50 ஆயிரம் போ் அமரக் கூடிய விளையாட்டு அரங்கில் 500 முக்கிய வரவேற்பாளா்கள் மட்டும் பங்கேற்பாா்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT