முகப்பு
இந்தியா

மத்திய அரசே தடுப்பூசியைக் கொள்முதல் செய்ய வேண்டும்: பிரதமருக்கு பினராயி கடிதம்

​கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகளை மத்திய அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:17 PM
கோப்புப்படம்
பகிர்:


கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசிகளை மத்திய அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார்.

கரோனா தடுப்பூசிகளை மத்திய அரசிடம் மட்டுமே நேரடியாக விநியோகிப்போம் என பைசர், மாடர்னா நிறுவனங்கள் தெரிவித்துள்ள நிலையில் பினராயி விஜயன் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளது:

"ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவையான கரோனா தடுப்பூசிகளைக் கணக்கிட்டு அதற்கேற்ப மத்திய அரசே உலகளாவிய ஒப்பந்தப் புள்ளியை மேற்கொள்ள வேண்டும். அதனை மாநில அரசுகளுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும். மாநிலங்கள் தனித் தனியாக கொள்முதல் செய்தால் அது விலையேற்றத்துக்கு வழிவகுக்கும்."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.