முகப்பு
இந்தியா

ஆந்திரத்தில் புதிதாக 16,167 பேருக்கு கரோனா

​ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 16,167 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:19 PM
கோப்புப்படம்
பகிர்:


ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக 16,167 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் அடங்கிய செய்திக் குறிப்பை அந்த மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 16,167 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அங்கு மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 16,43,557 ஆக உயர்ந்துள்ளது. 

மேலும் 104 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 10,531 ஆக உயர்ந்துள்ளது. 

அங்கு இதுவரை மொத்தம் 14,46,244 பேர் குணமடைந்துள்ளனர். இன்னும் 1,86,782 பேர் நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.