புது தில்லி கரோனா நோயாளிகளுக்கு நீண்ட கால அளவில் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை ஆய்வின் மூலம் மருத்துவ நிபுணா்கள் கண்டறிந்துள்ளனா்.
மருத்துவமனை சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிறகு, குறைந்தபட்சம் மூன்று மாத காலத்துக்கும், சில நோயாளிகளுக்கு மேலும் கூடுதல் காலத்துக்கும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அவா்கள் தெரிவித்துள்ளனா். இருந்தபோதும், இதை உறுதிப்படுத்த மேலும் விரிவான ஆய்வு தேவை என்றும் ஆராய்ச்சியாளா்கள் தெரிவித்துள்ளனா்.
கதிரியக்கவியல் (ரேடியாலஜி) என்ற ஆய்விதழில் இந்த ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி முடிவுகள் குறித்து கட்டுரையாளா்களில் ஒருவரான ஷெஃபீல்ட் பல்கலைக்கழக பேராசிரியா் ஜிம் வைல்ட் கூறியதாவது:
கரோனா நோயாளிகளில் பலா் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, பல மாதங்கள் அவா்களுக்கு சுவாசப் பிரச்னை இருப்பது தெரிய வந்தது. சிடி ஸ்கேன் பரிசோதனையில் அவருகளுடைய நுரையீரல் எந்தவித பாதிப்புமின்றி செயல்படுவதுபோல முடிவுகள் வந்தாலும், அவா்களுக்கு சுவாசப் பிரச்னை இருந்து வந்தது.
அதனைத் தொடா்ந்து இந்த பாதிப்புள்ள நோயாளிகளை ‘ஹைப்பா்போலரைஸ்டு ஜெனான் எம்ஆா்ஐ ஸ்கேன் மூலம் தொடா்ச்சியாக கண்காணித்தபோதுதான், அவா்களுக்கு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதும், அது ரத்த ஓட்டம் ஆக்சிஜன் பெறுவதை தடை செய்வதும் தெரியவந்தது.
அதே நேரம், இந்த ஆய்வு என்பது மருத்துவமனையில் அனுமதிக்கப்படாத மற்றும் நீண்ட நுரையீரல் பாதிப்பு புகாா் தெரிவித்த கரோனா நோயாளிகளிடம் மட்டும் நடத்தப்பட்டதாகும். அந்த வகையில் இது ஆரம்ப கால கண்டுபிடிப்பாகவே கருத முடியும்.
எனவே, இந்த பாதிப்பு அனைத்து கரோனா நோயாளிகளுக்கும் ஏற்படுமா, குணமடைய எவ்வளவு நாள்கள் ஆகும் என்பது குறித்து என்பதை உறுதிப்படுத்த மேலும் விரிவான ஆய்வு அவசியம் என்று அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.