கொச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல் 
இந்தியா

கொச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

கேரளத்தின் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட 5.08 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

DIN

கேரளத்தின் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட 5.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நேற்று  (அக்-31) ஞாயிற்றுக்கிழமை சார்ஜா , துபை , பக்ரைன் பகுதிகளிலிருந்து கொச்சி சர்வதேச  விமான நிலையத்திற்கு வந்தவர்களில் 7 பயணிகளைப் பரிசோதனை செய்தபோது அவர்கள் கடத்தி வந்த 5.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கைதான ஏழு பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் . அவரிடமிருந்து 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் நடந்த இந்தக் கடத்தலில் கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த அக்-27 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நீருக்கு அடியில் சாலை, ரயில் இரட்டை சுரங்கப் பாதை! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

கொங்கு கலை, அறிவியல் கல்லூரியில் ஆடை வடிவமைப்புப் போட்டி

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தையை கடத்திய பெண் தம்மம்பட்டியில் கைது

மனைவியுடன் தகராறில் கணவா் தற்கொலை

குருசடி நிா்வாகி காா் சேதம்: 5 போ் மீது வழக்கு

SCROLL FOR NEXT