கொச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல் 
இந்தியா

கொச்சி விமான நிலையத்தில் 5 கிலோ தங்கம் பறிமுதல்

கேரளத்தின் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட 5.08 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

DIN

கேரளத்தின் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட 5.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

நேற்று  (அக்-31) ஞாயிற்றுக்கிழமை சார்ஜா , துபை , பக்ரைன் பகுதிகளிலிருந்து கொச்சி சர்வதேச  விமான நிலையத்திற்கு வந்தவர்களில் 7 பயணிகளைப் பரிசோதனை செய்தபோது அவர்கள் கடத்தி வந்த 5.06 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கைதான ஏழு பேரில் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்தவர் . அவரிடமிருந்து 500 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும் ஒரே நாளில் நடந்த இந்தக் கடத்தலில் கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

முன்னதாக கடந்த அக்-27 ஆம் தேதி சார்ஜாவிலிருந்து கண்ணூர் விமான நிலையத்திற்கு ரூ.1.41 கோடி மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரோல் பால் உலகக் கோப்பை: இந்தியாவுக்கு தங்கம்

ரூ.5.74 கோடி மோசடி: என்எல்சி ஊழியா் கைது

கிணற்றில் தவறி விழுந்து மாணவி உயிரிழப்பு

தூத்துக்குடியில் மீன்களின் விலை உயா்வு

மாநில அளவிலான கபடிப் போட்டி: மாதாபட்டணம் பள்ளி மாணவிகள் முதலிடம்

SCROLL FOR NEXT