இந்தியா

மாநில நாள் - பிரதமர் மோடி வாழ்த்து

DIN

மாநில தினங்களைக் கொண்டாடும் கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கிறார்.

1956 , நவம்பர் 1 ஆம் தேதி மொழிவாரி மாநிலங்களாக சென்னை மாகாணத்தில் இருந்து கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் ஆகியவை பிரிக்கப்பட்டு புதிய மாநிலங்களாக உருவாக்கப்பட்டது. அன்றைய தினமே மத்தியப் பிரதேசமும் பின் 1966-இல் பஞ்சாபிலிருந்து ஹரியானாவும் 2000-ஆம் ஆண்டில் சத்தீஸ்கர் மாநிலமும் உதயமாகியது.

இவை அனைத்தும் நவம்பர் 1-ஆம் தேதியே மாநிலங்களாக அறிவிக்கப்பட்டதால் இந்த 6 மாநிலங்களும்  அரசு விழாவாக மாநில தினங்களைக் கொண்டாடி வருகிறார்கள். 

இந்நிலையில் பிரதமர் மோடி கேரளம் , கர்நாடகம் , ஆந்திரம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை அவரவர் மொழிகளிலேயே டிவிட்டரில் தெரிவித்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் விசாரணை தொடக்கம்!

சென்னை பூங்காக்களில் வளர்ப்பு நாய்களை அழைத்து வர கட்டுப்பாடு!

காங்கிரஸ் தலைவர் கார்கே வாக்களித்தார்!

உத்தரகண்டில் லேசான நிலநடுக்கம்!

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

SCROLL FOR NEXT