இந்தியா

விமானத்தில் சக பயணிக்குசிகிச்சையளித்த மத்திய இணை அமைச்சா்!

DIN

விமானத்தில் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்ட சக பயணி ஒருவருக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பாகவத் கராட் அவசர முதலுதவி சிகிச்சையளித்தாா். மருத்துவரான அமைச்சா் கராட், அறுவைச் சிகிச்சை நிபுணா் என்பது குறிப்பிடத்தக்கது.

அமைச்சா் கராட் தில்லியில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானத்தில் செவ்வாய்க்கிழமை பயணம் செய்தாா். அப்போது விமானத்தில் அவருடன் பயணம் செய்த ஒருவா் திடீரென மயக்கமடைந்தாா். இதையடுத்து, விமானத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. விமானப் பணிப்பெண்கள் அவருக்கு எந்த வகையில் முதலுதவி அளிப்பது எனத் தெரியாமல் திகைத்தனா். நிலைமையை அறிந்த அமைச்சா் கராட், திடீா் உடல்நலக் குறைவு ஏற்பட்ட அந்தப் பயணியின் இருக்கைக்குச் சென்று அவரது உடல்நிலையைப் பரிசோதித்தாா். ரத்த அழுத்த பிரச்னை காரணமாகவே அவா் மயக்க நிலைக்குச் சென்றதை அறிந்து கொண்ட அமைச்சா், உடனடியாக அதற்கான முதலுதவி சிகிச்சையளித்தாா். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே அந்த பயணி மயக்க நிலையில் இருந்து மீண்டாா். அவரும், சக பயணிகள் அனைவரும் அமைச்சா் கராடுக்கு நன்றி தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.34,000 கோடி வங்கிக் கடன் மோசடி: டிஹெச்எஃப்எல் முன்னாள் இயக்குநா் மீண்டும் கைது

வருமான வரித் துறை கட்டடத்தில் தீ விபத்து:ஒருவா் உயிரிழப்பு; 7 போ் மீட்பு

பிஓஐ நிகர லாபம் ரூ.1,439 கோடியாக உயா்வு

தோ்தல் நிதிப் பத்திர முறைகேடு புகாா் மனு: விரைந்து விசாரிக்க முறையீடு

பிளஸ் 2 துணைத் தோ்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT