முகப்பு
இந்தியா

ராணுவ அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு: இருவர் கைது

மகாராஷ்டிரத்தில் ராணுவ அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:35 AM
பகிர்:


மகாராஷ்டிர மாநிலம் புணேவில் ராணுவ அதிகாரிகள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றது தொடர்பாக இருவரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

ராணுவ வீரர்களுக்கானத் தேர்வில் முறைகேடாக தேர்வு எழுதி பணியில் சேர்வதற்கு ஹாவில்தார் பொறுப்பிலுள்ள இருவர் உதவியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

குற்றப் புலனாய்வுத் துறையின் ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், நடத்திய விசாரணையில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.