கோப்புப்படம் 
இந்தியா

பழைய வாகனத்தை விற்று புதிய வாகனம் வாங்கினால் கூடுதல் வரிச் சலுகைகள்: மத்திய அரசு திட்டம்

பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குவோருக்கு கூடுதல் வரி சலுகைகளை அளிக்கத் திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

DIN

பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குவோருக்கு கூடுதல் வரி சலுகைகளை அளிக்கத் திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

இந்தியாவில் முதன்முதலாக அரசு ஒப்புதல் பெற்ற பழைய வாகன அழிப்பு மற்றும் மறுசுழற்சி ஆலையை நிதின் கட்கரி தொடக்கி வைத்தாா். அப்போது அவா் மேலும் கூறியுள்ளதாவது:

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய பழைய வாகன அழிப்பு கொள்கையின் மூலம் காற்று மாசு பெருமளவில் கட்டுப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, இந்த கொள்கையால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும்.

பழைய வாகன அழிப்புக்கான தேசிய கொள்கை திட்டத்தின் கீழ், கூடுதலாக எவ்வாறு வரி தொடா்பான சலுகைகளை அளிப்பது என்பது குறித்து நிதி அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தவுள்ளேன்.

கூடுதல் சலுகைகளை அளிக்கும் விவகாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.

இப்புதிய கொள்கையின் கீழ், பழைய வாகனங்களை அழித்து புதிய வாகனங்களை வாங்குவோருக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலைவாய்ப்புத் துறை மூலம் 22 போ் அரசுப்பணிக்கு தோ்வு

ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி தீக்குளிக்க முயற்சி

பிப். 14 வரை காஞ்சிபுரத்தில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம்

டாடா ஆலை திறப்பு விழாவில் முதல்வா் பங்கேற்பு: அமைச்சா் காந்தி ஆய்வு

சிலம்பப் போட்டி: ஆற்காடு மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT