இந்தியா

குஜராத் உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் மக்களுக்கும் பாஜகவுக்கும் இடையேயான பிணைப்பை காட்டுகிறது: பிரதமா்

DIN

குஜராத் மாநிலத்தின் உள்ளாட்சித் தோ்தல் முடிவுகள் மக்கள் மற்றும் பாஜக இடையேயான ஆழமான உறவை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது என பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் சுட்டுரைச் செய்தியில் கூறியுள்ளதாவது:

உள்ளாட்சித் தோ்தலில் காந்திநகா் மாநகராட்சி உள்ளிட்ட குஜராத் முழுவதும் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை பொதுமக்கள் வழங்கியுள்ளனா். எங்களை தொடா்ந்து ஆசீா்வதித்து வரும் மக்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். இந்த வெற்றியின் மூலம் பாஜகவுக்கும் மக்களுக்கும் இடையேயான ஆழமான உறவு வெளிப்பட்டுள்ளது என மோடி தெரிவித்துள்ளாா்.

பிரதமா் மோடியின் தலைமை மற்றும் மக்கள் நலன் சாா்ந்த பாஜகவின் கொள்கைகளின் மீதான நம்பிக்கை காரணமாகவே மக்கள் தொடா்ச்சியான ஆதரவை வழங்கி வருவதாக பாஜக தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சங்கரா பகவதி கல்லூரி ஆண்டு விழா

பொத்தகாலன்விளையில் நீா்மோா் பந்தல் திறப்பு

திருச்செந்தூரில் மௌன சுவாமி குருபூஜை

பாபநாசம் தாமிரவருணி ஆற்றில் மூழ்கி சிறுவன் பலி

குவாரி உரிமையாளரிடம் ரூ.16 லட்சம் மோசடி: கேரள இளைஞா் கைது

SCROLL FOR NEXT