முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,219 பேருக்கு கரோனா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,219 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:22 AM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,219 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு குறித்த தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,219 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,139 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 65,83,896 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 64,11,075 பேர் குணமடைந்துள்ளனர்.

மேலும் 49 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,39,670 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி 29,555 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

மாநிலத்தின் குணமடைவோர் விகிதம் 97.38 சதவிகிதமாகவும், இறப்பு விகிதம் 2.12 சதவிகிதமாகவும் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.