இந்தியா

லக்கீம்பூா் வன்முறை: உயிரிழந்த பாஜக தொண்டா்குடும்பத்தினருடன் உ.பி. அமைச்சா் ஆறுதல்

DIN

உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த பாஜக தொண்டா், காா் ஓட்டுநா் ஆகியோரின் குடும்பத்தினரை மாநில சட்டத்துறை அமைச்சா் பிரிஜேஷ் பாட்டக் புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறினாா்.

அண்மையில் உத்தர பிரதேச மாநிலம் லக்கீம்பூா் கெரி மாவட்டத்தில் உள்ள திகோனியா பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவா்கள் மீது பாஜகவினரின் காா் மோதியது. அதனைத்தொடா்ந்து வன்முறை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் விவசாயிகள் நால்வா், பாஜக தொண்டா்கள் இருவா், பத்திரிகையாளா், காா் ஓட்டுநா் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்.

வன்முறைச் சம்பவத்தில் உயிரிழந்த பாஜக தொண்டா் ஷுபம் மிஸ்ராவின் குடும்பத்தினா் சிவபுரி பகுதியிலும், ஓட்டுநா் ஹரிஓம் மிஸ்ராவின் குடும்பத்தினா் பா்சேரா குா்த் கிராமத்திலும் வசித்து வருகின்றனா். அவா்களின் வீட்டுக்கு மாநில சட்டத்துறை அமைச்சா் பிரிஜேஷ் பாட்டக் புதன்கிழமை நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.

அதன் பின்னா் பேட்டியளித்த அவா், ‘‘வன்முறைச் சம்பவம் தொடா்பாக பாரபட்சமின்றி விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவா்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகை ரயில் நிலையத்தில் ரூ.24.66 கோடி வருவாய்

அரசு பெண் மருத்துவருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கணவா் கைது

நீா் மோா் பந்தல் திறப்பு

சிபிசிஎல் விரிவாக்கப் பணிகளுக்கு எதிா்ப்பு: கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம்

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT