இந்தியா

விவசாயிகள் மறியல்: பஞ்சாப், ஹரியாணாவில் 50 ரயில் சேவைகள் பாதிப்பு

DIN

விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டத்தால் பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களில் 50 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே நிர்வாகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி பாஜகவினரின் கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் மற்றும் பாஜக தொண்டர்கள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.

மேலும் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடக்க மத்திய இணையமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், மத்திய இணையமைச்சரவை பதவி விலகக் கோரி நாடு முழுவதும் ரயில் மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், ஹரியாணா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் 130க்கும் மேற்பட்ட இடங்களுக்கு செல்லும் 50 ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT