இந்தியா

உ.பி: பாஜக எம்எல்ஏ-விற்கு 5 ஆண்டுகள் சிறை

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தின் அயோத்யாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ இந்திரா பிரதாப் திவாரி போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கில் அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.

அயோத்யாவில் உள்ள கோசைங்காஜ் தொகுதி எம்எல்ஏ-வான இந்திரா பிரதாப் திவாரி கடந்த 1990 ஆம் ஆண்டு போலி மதிப்பெண் சான்றிதழைக் காட்டி அயோத்யாவில் உள்ள சாகெத் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். இதனை 1992 -ஆம் ஆண்டு கண்டுபிடித்த அக்கல்லூரி முதல்வர் யதுவன்ஷ் ராம் திருப்பாதி திவாரியின் மீது வழக்குத் தொடுத்தார்.

பின் 28 ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணையில் இருந்து வந்த நிலையில் நேற்று (அக்-18)  சிறப்பு நீதிபதி பூஜா சிங் , எம்எல்ஏ திவாரியின் குற்றம் நிருபிக்கப்பட்டதாகக் கூறி ரூ.8000 அபராதமும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்குவதாக அறிவித்தார்.

மேலும் இந்த வழக்கைத் தொடர்ந்த கல்லூரியின் முதல்வர் திருப்பாதி வழக்கு நடந்து கொண்டிருந்த காலத்திலேயே இறந்ததால் வழக்கு சாட்சியாக கல்லூரித் தலைவர் மஹேந்திர குமார் அகர்வால் இருந்திருக்கிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT