இந்தியா

கேரள நிலச்சரிவில் சிக்கி 42 பேர் பலி: பினராயி அறிவிப்பு

DIN

கேரளத்தில் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 42 பேர் உயிரிழந்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என்று கூறினார்.

நிலச்சரிவில் சிக்கியுள்ள மேலும், ஆறு பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட அவர், மழைக்காலத்தில் கடினமான சூழலை எதிர்கொள்ளும் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்தார்.

தொடர் மழை காரணமாக சட்டப்பேரவையில் அக்டோபர் 25-ஆம் தேதி வரை முதல்வர் உரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்தந்த தொகுதிகளில் பிரதிநிதிகள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறினார். 

காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் கடந்த 11-ஆம் தேதி முதல் மழை பெய்து வருகிறது. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளிலிலிருந்து 3,851 பேர் 304 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

தொடர் மழையால் 217 வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளது. 1,393 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளது என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT