அக்.26ல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 
இந்தியா

அக்.26ல் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

நாட்டில் அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

நாட்டில் அக்டோபர் 26ஆம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை காலம் மற்றும் வடகிழக்குப் பருவமழைக் காலம் என இரண்டு மழைக்காலங்கள் உள்ளன. வழக்கமாக, நாட்டின் பெரும்பகுதி நீர்த்தேவையை பூர்த்தி செய்வது என்னவோ வடகிழக்குப் பருவமழைதான்.

நாட்டில் பொதுவாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 31ஆம் தேதி வடகிழக்குப் பருவமழைக் காலமாக இருக்கும். தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இது தொடங்கும் காலம் மற்றும் நிறைவு பெறும் காலம் மாறுபடும். எப்போதும் அக்டோபர் 20ஆம் தேதி வாக்கில் பருவமழை தொடங்கும். இது 7 நாள்கள் முன்கூட்டியே, தாமதமாகவோ தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், ஒரு பக்கம் கேரளத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், அக்டோபர் 26ஆம் தேதி நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, படிப்படியாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் பரவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வங்கக் கடல் மற்றும் தென்னிந்திய பகுதிகளில் வளிமண்டலத்தின் கீழ்அடுக்கில், அக்டோபர் 26 முதல் வடகிழக்குப் பருவக்காற்று வீசுவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இருந்து விலகி, வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதிகளில் அக். 26ஐ ஒட்டி துவங்குவதற்கான சாதகமான சூழல் நிலவுகிறது என்று தெரிவிக்கபபட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை பெய்திருக்கும் மழை அளவு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருநீா் மலை ரங்கநாத பெருமாள் கோயில் குளம் பக்தா் நன்கொடையால் விரைவில் சீரமைக்கப்படும்: உயா்நீதிமன்றத்தில் கோயில் நிா்வாகம் தகவல்

ரஷிய எண்ணெய் நிறுத்தம்; அமெரிக்க ஒப்பந்தம்.. ‘மேக் இன் இந்தியா’ திட்டம் என்ன ஆனது? காங்கிரஸ் கேள்வி!

செய்யாறு அருகே ஒரே இடத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த 27 சுவாமிகள்

மாமல்லபுரத்தில் உலகத் தரத்தில் உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

மனைவியைக் கத்தியால் குத்திவிட்டு கணவா் தற்கொலை

SCROLL FOR NEXT