கோவாவில் அடுத்த கல்வியாண்டு முதல் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என முதல்வர் பிரமோந்த் சாவந்த் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மத்திய அரசால் புதிய கல்விக் கொள்கை - 2020 வரைவு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கோவாவில் அடுத்தாண்டு அமல்படுத்தப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.
இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோந்த் சாவந்த் கூறியது:
“அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்ட பிறகு அடுத்தாண்டு முதல் தொடக்க நிலைக் கல்வி வகுப்பு மாணவர்களுக்கு புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும்.”
புதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய இரண்டு உயர்நிலைக் குழுக்களை கோவா அரசு கடந்தாண்டு நியமித்தது. அந்தக் குழுவின் பரிந்துரை தற்போது அரசுக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.