முகப்பு
இந்தியா

உத்தரப் பிரதேச தேர்தல்: பிரியங்கா காந்தி தலைமையில் ஆலோசனை

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பிரியங்கா காந்தி தலைமையில் ஆலோசனை
பகிர்:

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்துக் கட்சிகளும் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

இந்நிலையில், லக்னெளவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் தேர்தலை எதிர்கொள்வது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை நடைபெற்றது.

Advertisement

வருகின்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments