நாடு முழுவதும் ஒரே நாளில் புதிதாக 27,254 பேருக்கு தொற்று; 219 பேர் பலி
நாடு முழுவதும் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,254 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனாவால் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 27,254 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நோய்த் தொற்றுக்கு 219 உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 27,254 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,32,64,175-ஆக உயா்ந்துள்ளது.
37,687 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,24,47,032 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3,74,269-ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 219 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,42,874-ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 74,38,37,643 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சனிக்கிழமை மட்டும் 53,38,945 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
இந்தியாவில் இதுவரை மொத்தம் 54,30,14,076 பரிசோதனைகளும், ஞாயிற்றுக்கிழமை மட்டும் 12,08,247 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.