இந்தியா

மாநிலங்களவை இடைத்தோ்தல்: திரிணமூல் வேட்பாளா் சுஷ்மிதா தேவ்

DIN

கொல்கத்தா: மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான இடைத்தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் சுஷ்மிதா தேவ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறாா்.

மாநிலங்களவை உறுப்பினராக இருந்த மானஸ் புனியா அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து, அவா் மாநிலங்களவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்ததால் அந்த இடத்துக்கு அக். 4-ஆம் தேதி இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக சுஷ்மிதா தேவ் அறிவிக்கப்பட்டிருக்கிறாா்.

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடா்பாளராகவும், மகளிா் பிரிவு தலைவராகவும் இருந்த சுஷ்மிதா தேவ், திரிணமூல் காங்கிரஸில் கடந்த மாதம் இணைந்தாா். அஸ்ஸாம், திரிபுராவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT