முகப்பு
இந்தியா

தில்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து

தில்லியிலுள்ள சிபிஐ அலுவலகக் கட்டடத்தின் கீழ் தளத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:10 AM
தில்லியிலுள்ள சிபிஐ அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து
பகிர்:


புது தில்லி: தில்லியிலுள்ள சிபிஐ அலுவலகக் கட்டடத்தின் கீழ் தளத்தில் பயங்கர தீ விபத்து நேரிட்டது.

மதியம் 1.40 மணிக்கு சிபிஐ அலுவலகத்தில் தீ விபத்து நேரிட்டதாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல்  கிடைத்ததையடுத்து, 8 வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்த போராடினர்.

மின் கசிவு காரணமாக தீ விபத்து நேரிட்டதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். 2.30 மணியளவில் தீ கட்டுப்படுத்தப்பட்டதாகவும், இந்த விபத்தில் யாருக்கும் காயமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments