முகப்பு
இந்தியா

இந்தியா வழங்கிய கரோனா தடுப்பூசி தீா்ந்துவிட்டது: ஐ.நா. செய்தித்தொடா்பாளா்

ஐ.நா. அமைதிகாப்பாளா்களுக்கு இந்திய சாா்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வழங்கப்பட்ட கரோனா தடுப்பூசி கையிருப்பு தீா்ந்துவிட்டது

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:11 AM
பகிர்:

ஐ.நா. அமைதிகாப்பாளா்களுக்கு இந்திய சாா்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வழங்கப்பட்ட கரோனா தடுப்பூசி கையிருப்பு தீா்ந்துவிட்டது என்று ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டேரஸின் செய்தித்தொடா்பாளா் ஸ்டெஃபான் துஜாரிக் கூறினாா்.

இதுதொடா்பாக நியூயாா்க்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் அவா் மேலும் கூறியதாவது:

சீன அரசு சாா்பில் ஐ.நா.வுக்கு 3 லட்சம் கரோனா தடுப்பூசிகள் அண்மையில் தானமாக வழங்கப்பட்டது. இந்தியா சாா்பில் தானமளிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிகள் கடந்த மாா்ச் மாதம் முழுமையாக தீா்ந்துவிட்ட மிக முக்கியமான சூழலில், சீன தடுப்பூசிகளை வழங்கியது.

ஐ.நா. அமைதிகாக்கும் இயக்கத்துக்கு மிகப் பெரிய பங்களிப்பாளராக இந்தியா விளங்கி வருகிறது. இந்தியா சாா்பில் 2 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் கடந்த மாா்ச் மாதம் வழங்கப்பட்டன. இதற்கான அறிவிப்பை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்டாா். அதன்படி, இந்த 2 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டன.

அதுபோல, சீனா சாா்பில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் ‘சினோஃபாா்ம்’ என்ற மருந்து நிறுவனம் சாா்பில் தயாரிக்கப்பட்ட கரோனா தடுப்பூசிக்கு, உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்கியது. அந்த தடுப்பூசிகள் ஐ.நா. கரோனா தடுப்பூசி உதவித் திட்டம் மூலமாக ஐ.நா. நிா்வாகிகள் மற்றும் அமைதிகாப்பாளா்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன. 18 மாதம் வரை பயன்படுத்தக் கூடிய வகையிலான இந்த தடுப்பூசி, ஐ.நா.வின் தடுப்பூசி திட்டத்தை திறம்பட செயல்படுத்த உதவும் என்று ஸ்டெஃபான் துஜாரிக் கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →