கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,161 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 90,394 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதில் 12,161 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் 13.45 சதவிகிதம்.
மேலும் 17,862 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 155 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 24,965 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | தில்லியில் புதிதாக 41 பேருக்கு கரோனா
இன்றைய நிலவரப்படி 1,43,500 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 12.7 சதவிகிதத்தினர் மருத்துவமனைகளில் உள்ளனர்.
18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 92.2 சதவிகிதத்தினர் குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். மொத்த மக்கள்தொகையில் 40.5 சதவிகிதத்தினர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.