இந்தியா

தாணே: பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து 

தாணே ஜில்லா பரிஷத்தின் சுகாதாரத் துறையின் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது.

DIN

தாணே ஜில்லா பரிஷத்தின் சுகாதாரத் துறையின் பேரிடர் கட்டுப்பாட்டு அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

இன்று காலை 6 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஸ்டேஷன் சாலையில் உள்ள ஜில்லா பரிஷத் தலைமையகம் அருகே அமைந்துள்ள பேரிடர் கட்டுப்பாட்டு அறையிலிருந்த புகைப்பட நகல் இயந்திரம் மற்றும் கேபிள்கள் எரிந்து நாசமானது.

தாணே முனிசிபன் நிறுவனத்தின், பிராந்திய பேரிடர் மேலாண்மை பிரிவு குழுவினர் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சுமார் 30 நிமிடங்களில் தீயை அணைத்தனர். 

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல்-ஹமாஸ் போா் நிறுத்தம்: எகிப்தில் இன்று சா்வதேச மாநாடு! டிரம்ப் உள்பட உலகத் தலைவா்கள் பங்கேற்பு!

நாசரேத்தில் ஆம்னி பேருந்து மோதியதில் சாலையில் சரிந்த மரம்: போக்குவரத்து பாதிப்பு

மருமகன் வெட்டிக் கொலை: மாமனாா் மீது வழக்கு

பிகாா் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி! காங்கிரஸ் தலைவா்களைச் சந்திக்க லாலு, தேஜஸ்வி தில்லி பயணம்!

ரூ.7.5 லட்சம் விதைகள் விற்க தடை: 5 கடைகளின் உரிமம் ரத்து

SCROLL FOR NEXT