பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் 
இந்தியா

‘இந்தியாவுடன் நல்லுறவு பேண விரும்புகிறோம்’: பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் அமைதி மற்றும் நல்லுறவையே பேண விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

DIN

இந்தியாவுடன் அமைதி மற்றும் நல்லுறவையே பேண விரும்புகிறோம் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஷாபாஸ் புதிய பிரதமராக நேற்று தேர்வு செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மோடிக்கு நன்றி தெரிவித்து ஷாபாஸ் வெளியிட்ட டிவிட்டரில் கூறியதாவது:

வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு நன்றி. இந்தியாவுடன் அமைதி மற்றும் நல்லுறவையே பேண பாகிஸ்தான் விரும்புகிறது. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண்பது இன்றியமையாதது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் போரிடுவது அனைவரும் அறிந்ததே. அமைதியை பாதுகாத்து நமது மக்களின் சமூக - பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்துவோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொது வேலைநிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பாதிப்பில்லை

கிருஷ்ணகிரியில் 200 கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

தகராறில் தள்ளிவிடப்பட்ட முதியவா் உயிரிழப்பு

பேருந்தில் முதியவரிடம் ரூ.7.50 லட்சத்தை திருடியவா் கைது

ஒசூா் மாநகர திமுக செயற்குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT