கோப்புப்படம் 
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் ஆயுதங்கள், வெடிபொருட்கள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ளூர் ராணுவப் பிரிவுடன் இணைந்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

DIN

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ளூர் ராணுவப் பிரிவுடன் இணைந்து காவல்துறையினர் நடத்திய சோதனையில் ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

எல்லையில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருள்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, கர்னா காவல் நிலையத்தின் அதிகாரி முதாசர் அகமது மற்றும் துணை ஆணையர் தலைமையிலான ஒரு குழு, உள்ளூர் ராணுவ பிரிவினருடன் சேர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்

தாத் கர்னாவைச் சேர்ந்த ஹஜாம் மொஹல்லாவிடமிருந்து 10 கைத்துப்பாக்கிகள், 17 கைத்துப்பாக்கிகள், 54 பிஸ்டல் ரவுண்டுகள் மற்றும் 5 கையெறி குண்டுகள் உள்ளிட்ட பெரும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக கடத்தப்பட்ட புதிய ஆயுதங்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

"அனைவருக்கும் ஸ்டார்ட்அப்' மையம் சென்னை ஐஐடி-யில் தொடக்கம்

வாக்குச்சாவடி நிலைய அலுவலா் 2-க்கான ஆலோசனைக் கூட்டம்

பால் பண்ணை தொழில் முனைவோருக்கு ஒரு மாத திறன் மேம்பாட்டுப் பயிற்சி இன்று தொடக்கம்

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தொடக்கம்: வீடு வீடாகச் சென்று படிவங்கள் அளிப்பு

SCROLL FOR NEXT