இந்தியா

பொது இடங்களில் முகக்கவசம் அணியவேண்டும், ஆனால் கட்டாயமில்லை: கோவா அரசு

DIN

பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும், ஆனால் கட்டாயமில்லை என்று கோவா அரசு தெரிவித்துள்ளது. 

தொற்று நோயின் மற்றொரு அலைக்கான சாத்தியக் கூறுகளைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் முகக்கவசம் அணியுமாறு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார். 

கரோனா நிலைமையை ஆய்வு செய்த பிரதமர் மோடியுடனான கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சாவந்த்,

கரோனா நோய்த் தொற்றின் மற்றொரு அலையின் சாத்தியத்தைக் கருத்தில் கொண்டு, பொது இடங்களில் முகக்கவசங்களை அணியுமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படும், ஆனால் இது கட்டாயமில்லை. இதற்காக மக்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். 

கோவாவில் கரோனா நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 7 பேருக்கு மட்டுமே தொற்று பதிவாகியுள்ளன. மேலும், தொற்று காரணமாக யாரும் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. 

கரோனா நோய்த் தொற்றின் மற்றொரு அலையை எதிர்கொள்ள கடலோர மாநிலம் தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளுடன் தயாராக உள்ளது என்றார் அவர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT