இந்தியா

மாநிலங்களுக்கு 8 மாத ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிப்பு

மாநிலங்களுக்கு 2022 மாா்ச் வரையிலான நிலவரப்படி 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் இருப்பதாகவும்

DIN

மாநிலங்களுக்கு 2022 மாா்ச் வரையிலான நிலவரப்படி 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டிலும் 10 மாதங்களுக்கான (ஏப்ரல்- ஜனவரி) ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை மாநில அரசுகளுக்கு அதே ஆண்டிலும், பிப்ரவரி- மாா்ச் வரையிலான இழப்பீட்டுத் தொகை அடுத்த நிதியாண்டிலும் விடுவிக்கப்படும்.

இதில், 2021-22 ஆண்டுக்கான 10 மாத இழப்பீட்டுத் தொகையில், 8 மாதங்களுக்கான நிதி மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் உள்ளது. வரி வருவாய் கிடைத்ததும் இந்தத் தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக உறுப்பு தான தின விழிப்புணா்வு

வாழப்பாடி அருகே இரு பைக்குகள் நேருக்குநோ் மோதல்: மாணவா் உள்பட இருவா் உயிரிழப்பு

சேலம் ரயில் நிலையத்தில் விரைவு ரயில் பெட்டியின் கண்ணாடிகள் உடைப்பு: இளைஞரிடம் விசாரணை

தியாகி தீரன் சின்னமலை நினைவு தினம்: நினைவுச் சின்னத்தில் தமிழக அரசு மரியாதை

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT