இந்தியா

மாநிலங்களுக்கு 8 மாத ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிப்பு

மாநிலங்களுக்கு 2022 மாா்ச் வரையிலான நிலவரப்படி 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் இருப்பதாகவும்

DIN

மாநிலங்களுக்கு 2022 மாா்ச் வரையிலான நிலவரப்படி 8 மாதங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் இருப்பதாகவும் மத்திய நிதியமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு விவரம்: பொதுவாக ஒவ்வொரு நிதியாண்டிலும் 10 மாதங்களுக்கான (ஏப்ரல்- ஜனவரி) ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை மாநில அரசுகளுக்கு அதே ஆண்டிலும், பிப்ரவரி- மாா்ச் வரையிலான இழப்பீட்டுத் தொகை அடுத்த நிதியாண்டிலும் விடுவிக்கப்படும்.

இதில், 2021-22 ஆண்டுக்கான 10 மாத இழப்பீட்டுத் தொகையில், 8 மாதங்களுக்கான நிதி மாநில அரசுகளுக்கு ஏற்கெனவே விடுவிக்கப்பட்டுள்ளது. நிதிப் பற்றாக்குறை காரணமாக ரூ.78,704 கோடி நிலுவையில் உள்ளது. வரி வருவாய் கிடைத்ததும் இந்தத் தொகை மாநிலங்களுக்கு விடுவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT