இந்தியா

இந்தியாவில் வளர்ச்சியும், வெறுப்பும் ஒன்றாக இருக்க முடியாது: ராகுல் காந்தி

DIN

புது தில்லி: இந்தியாவில் இருந்து சில சர்வதேச நிறுவனங்கள் வெளியேறுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி புதன்கிழமை தாக்கி சுட்டிரையில் கூறினார். மேலும் இந்தியாவில் வளர்ச்சியும், வெறுப்பும் ஒன்றாக இருக்க முடியாது என்று கூறினார்.

ராகுல் காந்தி நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பற்றி பேசினார் மற்றும் வேலையின்மை நெருக்கடி குறித்து கவனம் செலுத்துமாறு பிரதமரை வலியுறுத்தினார்.

நாட்டில் நிலவும் சூழலால் 7 சர்வதேச நிறுவனங்கள் இந்தியாவை விட்டு சென்றுவிட்டன. 9 தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. 649 டீலர்ஷிப்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 84,000 பேர் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று ராகுல் காந்தி கூறினார்.


நாட்டை விட்டு வெளியேறிய ஏழு சர்வதேச நிறுவனங்களை காட்டும் படத்தை ராகுல் காந்தி சுட்டுரையில் பகிர்ந்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேதார்நாத் யாத்திரை: முதல் நாளில் 29,000 பக்தர்கள் தரிசனம்

கேகேஆர் பேட்டிங்; ஓவர்கள் குறைப்பு!

தொழில்நுட்பத் திறமைகளை மாணவா்கள் வளா்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணா பல்கலை. துணைவேந்தா்

15-இல் வேலூரில் கல்லூரி கனவு உயா்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி

வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட ஓஆா்எஸ் கரைசல் வழங்க ஏற்பாடு: காஞ்சிபுரம் ஆட்சியா்

SCROLL FOR NEXT