ஜூன் தொடக்கத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலம்: அஸ்வினி வைஷ்ணவ்
ஜூன் மாத தொடக்கத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்த வாய்ப்புள்ளதாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
புது தில்லி: ஜூன் மாத தொடக்கத்தில் 5ஜி அலைக்கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்த வாய்ப்புள்ளதாக தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
அதிநவீன தொழில்நுட்ப பயன்பாடுகளுக்கும் தொழில் துறையினருக்கும் அதிவேக இணையவசதி அவசியமாகவுள்ளது. இதனால், 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசைக்காக இந்தியச் சந்தை காத்துக் கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன், 5ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் ஏலம், விலை ஆகியவை தொடா்பாக, தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) சில பரிந்துரைகளை அளித்தது.
ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் அட்டவணை குறித்து கேட்டதற்கு, ஜூன் தொடக்கத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
Advertisement
Advertisement
5ஜி சேவைகளை வெளியிடுவதற்கான களத்தை அமைத்து, தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ரூ.7க்கு மேல் மதிப்புள்ள ஒரு மெகா ஏலத் திட்டத்தை முன்வைத்துள்ளது.