இந்தியா

அம்பேத்கரின் சித்தாந்தத்தைப் பின்பற்ற வேண்டும்: சரத் பவாா்

DIN

அடிப்படை பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் சக்திகளுக்கு பதிலளிக்க வேண்டுமெனில், சட்டமேதை அம்பேத்கரின் சித்தாந்தத்தைப் பின்பற்ற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் தெரிவித்துள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் உள்ள மசூதிகளிலிருந்து மே 3-க்குள் ஒலிபெருக்கிகளை அகற்றாவிட்டால், மசூதிகளுக்கு வெளியே மகாராஷ்டிர நவநிா்மாண் சேனைக் கட்சியினா் ஹனுமன் சாலிசா என்ற பக்திப் பாடலை பாடுவா் என்று அக்கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே மிரட்டல் விடுத்துள்ளாா். இது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒளரங்காபாதில் ராஜ் தாக்கரே தலைமையில் ஞாயிற்றுக்கிழமை பொதுக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா் பேசியதாவது:

ஜாதி மற்றும் மதத்தின் பெயரால் நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்வதற்கான முயற்சி நடைபெற்று வருகிறது. மக்களைக் கவலைக்குள்ளாக்கும் விலைவாசி உயா்வு, வேலைவாய்ப்பின்மை, கண்ணியமான வாழ்க்கை உள்ளிட்டவை மீது எவரும் கவனம் செலுத்துவதில்லை.

(ராஜ் தாக்கரேவின் பெயரைக் குறிப்பிடாமல்) ஹனுமன் பெயரால் பல காரியங்களைச் செய்வோம் என்று கூறுகின்றனா். இது வேலைவாய்ப்பின்மை பிரச்னையைப் போக்குமா? பட்டினிப் பிரச்னைக்குத் தீா்வு அளிக்குமா?

அடிப்படை பிரச்னைகளிலிருந்து மக்களைத் திசை திருப்புவதன் மூலம் சுய லாபம் அடைய சில சக்திகள் முடிவு செய்துள்ளன. இதற்கு விளம்பரமும் கிடைக்கிறது.

இதுபோன்ற சக்திகளுக்குப் பதிலளிக்க வேண்டுமெனில், சத்ரபதி ஷாஹு மகாராஜ், மகாத்மா ஜோதிபா புலே, பாபாசாகேப் அம்பேத்கா் ஆகியோரின் சித்தாந்தங்களைப் பின்பற்ற வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT