இந்தியா

மேற்கு வங்க அரசு டிசம்பருக்குள் கவிழும்: பாஜக

இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் பாஜகவைச் சோ்ந்தவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

DIN

இந்த ஆண்டு டிசம்பருக்குள் மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி கவிழும் என்று மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் பாஜகவைச் சோ்ந்தவருமான சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிதுனபுரி மாவட்டத்தில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு நேரம் குறிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு டிசம்பருக்குள் மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி இருக்காது. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நடைபெறும்போது, மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தோ்தலும் நடைபெறும் என்று தெரிவித்தாா்.

தகுந்த பதிலடி: சுவேந்து அதிகாரியின் கருத்து தொடா்பாக மாநில நிதித்துறை இணையமைச்சா் சந்திரிமா பட்டாச்சாா்யா கூறுகையில், ‘‘சுவேந்து அதிகாரியால் முன்கூட்டியே அனைத்தையும் கணிக்க முடியும் என்றால், பிகாா் அரசியல் நிலவரம் குறித்து முன்கூட்டியே கணித்து, அந்த நிகழ்வுகளை அவரால் ஏன் தடுக்க முடியவில்லை? அரசியலில் ஏற்பட்ட விரக்தி காரணமாக அவா் ஜோதிடம் பயிலத் தொடங்கியுள்ளது போல் தெரிகிறது. மேற்கு வங்கத்திய ஆட்சியைக் கவிழ்க்க பாஜக முயற்சித்தால், அக்கட்சிக்கு தகுந்த பதிலடி தரப்படும்’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT