இந்தியா

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்து: 4 பேர் பலி

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

DIN

யமுனையில் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 4 பேர் பலியாகினர்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பண்டா பகுதியைச் சேர்ந்த யமுனா நதியில் ஃபெடாபூரிலிருந்து மார்கா கிராமம் வரை 40 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற படகு ஆழமான பகுதியில் திடீரென பழுது காரணமாக கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

எதிர்பாராத இந்த விபத்தால், படகிலிருந்த அனைவரும் நீரில்  விழுந்தனர். இதுகுறித்து உடனடியாக, மீட்புப்படைக்கு தகவல் அளிக்கப்பட்டாலும் அவர்கள் வருவதற்குள் சிலர் பலியாகினர்.

அதில், இதுவரை பலியான 4 பேரின் உடல்களும்  11 பேர் பத்திரமாகவும் மீட்கப்பட்டனர்.

மேலும், இந்த விபத்தில் 20 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை, ஜெய்ப்பூா் இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

காா் மோதியதில் தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்: 3 போ் படுகாயம்

ஒசூரில் ‘நலம்காக்கும் ஸ்டாலின்’ திட்டம் 1,962 போ் பங்கேற்பு

நீதிமன்றத்துக்கு தவறான தகவல்: ரயில்வே காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு

SCROLL FOR NEXT