இந்தியா

மகாராஷ்டிரம்: ரகசிய தகவல் மூலம் 218 கிலோ கஞ்சா பறிமுதல்

DIN

ராஜஸ்தான் காவல் துறை கொடுத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மகாராஷ்டிரத்தின் நாக்பூரில் வருவாய்த் துறை அதிகாரிகளால் 218 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து காவல் துறை கூடுதல் டிஜிபி ரவி பிரகாஷ் மேஹ்ரா கூறியதாவது: “ பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப் பொருள்களின்  சந்தை மதிப்பு 40 லட்சம். இந்தப் போதைப் பொருள்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து ராஜஸ்தானுக்கு எடுத்துச் செல்வதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. கஞ்சா விசாகப்படினம் வழியாக ராஜஸ்தானுக்கு கடத்தப்பட இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. 

இரண்டு இளைஞர்கள் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடும் சிவராஜ் மஹாவரால் ராஜஸ்தானிலில் இருந்து விசாகப்பட்டினத்திற்கு கஞ்சாவை பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மகாராஷ்டிரத்தின் நாக்பூர் வந்தடைந்தபோது அவர்களிடம் இருந்து 218 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த கஞ்சா கடத்தல் தொடர்பாக காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது." என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

SCROLL FOR NEXT