முகப்பு
இந்தியா

இளைஞர்கள் தங்களது உரிமையைப் போல் கடமையிலும் கவனமாக இருக்க வேண்டும்: தர்மேந்திர பிரதான்

இளைஞர்கள் அவர்களது உரிமையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அதே வேளையில் அவர்களது கடமையிலும்  கவனமாக இருக்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Updated On : 12 ஆகஸ்ட் 2022, 5:04 pm IST
பகிர்:

இளைஞர்கள் அவர்களது உரிமையில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அதே வேளையில் அவர்களது கடமையிலும்  கவனமாக இருக்க வேண்டும் என மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

இளைஞர்கள் நலத் துறை சார்பில் நடத்தப்பட்ட யுவா சம்வத்: இந்தியா 2047 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் பேசியதாவது: “ இளைஞர்கள் சவால்களை ஏற்றுக் கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். அந்த சவால்கள்  வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் அவர்களுக்கென புதிய வேலைவாய்ப்பை உருவாக்கும். இந்தியாவிடம் இருந்து உலக நாடுகள் நிறைய எதிர்பார்க்கின்றன. இந்தியாவில் இருக்கும் இளைஞர்கள் இனி அவர்களது குடும்பத்தினருக்கு மட்டும் கடமையாற்றினால் போதாது. அவர்கள் நாட்டிற்காகவும் மற்ற நாடுகளில் இருக்கும் குறைந்த சலுகைகள் மட்டுமே கிடைக்கபெற்ற மக்களுக்காகவும் அவர்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும்.

Advertisement

Advertisement

உலக நாடுகள் இந்தியாவின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளன. நான் இளைஞர்களிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உங்களது உரிமையில் விழிப்புணர்வுடன் இருங்கள். ஆனால், அதே சமயத்தில் உங்களது கடமைகள் மற்றும் பொறுப்புகளில் கவனமாக இருங்கள். உலகில் நிலவும் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண இளைஞர்கள் பொறுப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments