நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசிப் பேருந்து மும்பையில் இயக்கம் 
இந்தியா

நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசிப் பேருந்து மும்பையில் இயக்கம்

நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று துவக்கி வைத்தார்.

DIN


நாட்டின் முதல் இரட்டை அடுக்கு ஏசி வசதி கொண்ட மின்சாரத்தில் இயங்கும் பேருந்துப் போக்குவரத்தை, மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று துவக்கி வைத்தார்.

இஐவி22 என்ற மின்சாரத்தில் இயங்கும் இந்த இரட்டை அடுக்குப் பேருந்து, 250 கி.மீ. தொலைவு வரை இயக்கப்படும் திறன் கொண்டது.

இந்துஜா குழுமத்தின் அஷோக் லைலேண்ட் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தில் இயங்கம் இந்த இரட்டை அடுக்குப் பேருந்தில் அதிகபட்சமாக 65 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. தானியங்கி கதவுகள் மற்றும் சிசிடிவி கேமரா வசதித கொண்டது.

முதற்கட்டமாக 200 மின்சாரத்தில் இயங்கும் இரட்டை அடுக்குப் பேருந்துகளை வாங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டுக்குள் 50 பேருந்துகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொங்கல்: சிறப்புப் பேருந்துகளில் 4.88 லட்சம் பேர் பயணம்

தில்லியில் இருந்து புறப்பட்டார் விஜய்!

விளையாட்டுக் கல்வியும் வேலைவாய்ப்புகளும்!

பொங்கட்டும் மகிழ்ச்சி; வெல்லட்டும் தமிழ்நாடு! முதல்வர் ஸ்டாலின்

தமிழக மீனவர்கள் 10 பேர் கைது!

SCROLL FOR NEXT