இந்தியா

என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 30% பங்குகளை வாங்கும் அதானி குழுமம்!

DIN

இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 30 சதவீதப் பங்குகளை வாங்க உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.

அதானி தன் குழுமத்தை விரிவாக்கும் பொருட்டு புதிதாக பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 5ஜி ஏலத்தில் அதானி நெட்வோர்க் என்கிற புதிய நிறுவனம் பங்குபெற்றது.

மேலும், அதானி ஒடிசா மாநிலத்தின் ராயகடா பகுதியில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக அம்மாநில அரசிடம் உரிமம் பெற்றதுடன் ரூ.41,000 கோடியை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 29.18 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வைத்துள்ள நிலையில், மேலும் 26% பங்குகளை வாங்க பங்குதாரர்களிடம் சலுகையை அறிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கை கையகப்படுத்த உள்ளதால் நிர்வாக முடிவுகளைக் எடுக்கக் கூடிய பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும்: ஆா்ஜேடி தலைவா் லாலு

பிளஸ் 2: சென்னிமலை கொங்கு பள்ளி 100 சதவீத தோ்ச்சி

பிளஸ் 2: பெருந்துறை அரசு ஆண்கள் பள்ளி 96.25 % தோ்ச்சி

இந்திய குடும்பங்களின் சேமிப்பு ரூ.14.16 லட்சம் கோடியாக சரிவு

பிளஸ் 2: சிவகிரி அரசுப் பெண்கள் பள்ளி 100% தோ்ச்சி

SCROLL FOR NEXT