இந்தியா

அசாமின் லக்கிம்பூரில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலம் பாதிப்பு

DIN

அசாமின் லக்கிம்பூரில் மத நிகழ்வில் பிரசாதம் சாப்பிட்ட 70 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அசாம் மாநிலம், லக்கிம்பூர் மாவட்டத்தில் உள்ள நாராயண்பூர் அருகே பான்பரி பகுதியில் புதன்கிழமை இரவு நடைபெற்ற மத நிகழ்வில் பிரசாதம் சாப்பிட்டவர்களுக்கு திடீரென வயிற்றுவலி மற்றும் வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டது. இதுகுறித்து மறுநாள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிய வரவே சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். 

நாராயண்பூர் மருத்துவமனையின் மருத்துவர் கோகோய் கூறுகையில், ஆகஸ்ட் 24 இரவு நடந்த மத நிகழ்ச்சியில் கிராம மக்கள் சிலர் பங்கேற்றிருக்கின்றனர். அப்போது பிரசாதம் சாப்பிட்ட சிலருக்கு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன. இதையடுத்து இன்று 22 பெண்கள் மற்றும் 6 குழந்தைகள் உட்பட சுமார் 32 நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அத்துடன் 10 பெண்கள் உட்பட மேலும் 19 பேரையும் அனுமதித்துள்ளோம்.

அவர்களுக்கு சிகிச்சை வழங்கியுள்ளோம். மேலும் பலருக்கு வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதாக புகார் வந்துள்ளது என்றார். இச்சம்பவம் லக்கிம்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவில்பட்டியில் புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

கடையநல்லூா், புளியங்குடி பகுதிகளில் பலத்த மழை

மணமேல்குடியில் 111.8 மிமீ மழை

3 நாள்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை -புதுகை ஆட்சியரகத்தில் கட்டுப்பாட்டு அறை திறப்பு

ராஜஸ்தானை கட்டுப்படுத்தியது பஞ்சாப்

SCROLL FOR NEXT