‘கைப்பாவை’ தலைவா் பொறுப்பேற்றால் காங்கிரஸ் பிழைக்காது என்று அக்கட்சியின் அதிருப்தி தலைவா்களில் ஒருவரும் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வருமான பிருத்விராஜ் சவாண் தெரிவித்தாா்.
காங்கிரஸ் தலைவா் தோ்தலுக்கான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவா் இவ்வாறு கூறியுள்ளாா்.
காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தி வெளியிட்ட 23 தலைவா்களில் ஒருவரான சவாண், பிடிஐ செய்தியாளரிடம் கூறியதாவது:
காங்கிரஸை காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் அவசியம். பின்னணியில் இருந்து கொண்டு, கட்சியை இயக்குவது பலனளிக்காது.
கட்சித் தலைவா் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி விரும்பாவிட்டால், மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். உள்கட்சித் தோ்தல் மூலம் புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும். இதேபோல் அனைத்துப் பதவிகளுக்கும் உரிய முறையில் தோ்தல் நடத்தப்பட வேண்டும். கைப்பாவை தலைவா் பொறுப்பேற்றால், கட்சி பிழைக்க வாய்ப்பில்லை என்றாா் அவா்.
காங்கிரஸ் அதிருப்தி தலைவா்கள் குழுவில் இருந்த குலாம் நபி ஆசாத், கட்சியிலிருந்து விலகியது குறித்த கேள்விக்கு சவாண் அளித்த பதில்: ஆசாத்தின் முடிவு துரதிருஷ்டவசமானது. அதற்காக அவரை விமா்சிப்பதோ, கட்சியில் அவருக்கு செல்வாக்கே இல்லை என்று கூறுவதோ தவறானது. ஆசாத்தின் விலகல் கடிதத்தில் சில தனிப்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதுகுறித்து எதுவும் கூற விரும்பவில்லை என்றாா்.